உலக நாடுகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் 5 இந்தியர்கள் - யாரெல்லாம், எந்த நாடுகள் தெரியுமா?
மற்ற நாடுகளில் தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் 5 இந்திய வம்சாவளி நபர்களை பற்றி பார்ப்போம்
இந்திய வம்சாவளியினர்
பொதுவாகவே இந்தியர்கள் அரசியல், வணிகம், கலை, அறிவியல் உள்பட பல துறைகளில் உலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் பல நாடுகளில் தலைமை பொறுப்பில் உள்ளனர்.
அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முதல் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் வரை, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தலைமை பொறுப்புகளில் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் மற்ற நாடுகளில் தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் 5 இந்திய வம்சாவளி நபர்களை பற்றி பார்ப்போம்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமராக உள்ளார் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, சுனக் 2020 முதல் 2022 வரை போரிஸ் ஜான்சனின் கீழ் கருவூலத்தின் அதிபராக பணியாற்றினார்.
இவர் இந்திய தொழில் அதிபரும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துகொண்டார்.
அன்டோனியோ கோஸ்டா
கோவா வம்சாவளியை சேர்ந்தவர் அன்டோனியோ கோஸ்டா. தற்போது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக உள்ளார். பாதி இந்தியர் மற்றும் பாதி போர்ச்சுக்கீசியத்தை சேர்ந்தவர் ஆவார். சமூகவியலாளர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார் அன்டோனியோ கோஸ்டா.
கமலா ஹாரிஸ்
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜனவரியில் அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.
தர்மன் சண்முகரத்தினம்
தற்போது நடந்து முடிந்த சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவர் முன்னாள் துணைப் பிரதமரும், நிதி அமைச்சரும் ஆவார். மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார்.
முகமது இர்ஃபான் அலி
கயானாவின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி மற்றும் தென் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முகமது இர்ஃபான் அலி. இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் பொருளாதார நிபுணரும் ஆவார்.