2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் - 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ் - ப.சிதம்பரம், ஜோதிமணி தேர்வு

Indian National Congress Rahul Gandhi Sonia Gandhi
By Nandhini May 24, 2022 07:51 AM GMT
Report

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்தத் தேர்தலில் உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல், பாஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லை. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை தற்போது காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டுக்குழு, யாத்திரை குழு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

அரசியல் விவகாரங்களுக்கான சூழலில், தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், ஜோதிமணி உட்பட 8 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் - 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ் - ப.சிதம்பரம், ஜோதிமணி தேர்வு | Indian National Congress Sonia Gandhi Rahul Gandhi