அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இந்தியர் உயிரிழப்பு..!

United States of America India
By Thahir Jun 22, 2022 10:39 PM GMT
Report

அமெரிக்காவில் காருக்குள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் போராடிய இந்தியர் உயிரிழந்தார்.

இந்தியா இளைஞர் உயிரிழப்பு 

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சந்திரன் 25 வயதான இவர் அமெரிக்காவில் உள்ள காடன் அவன்யூ பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தனது காரில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அமெரிக்காவில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இந்தியர் உயிரிழப்பு..! | Indian Killed In Us Head On Bombing

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சாய் சந்திரனை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சாய் சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாய் சந்திரன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.