''அதிசயம் அற்புதம் நிகழ்த்துபவர்களுக்கு ஒரே நாளில் பிறந்தாள்'' - வைரலாகும் முகமது கைஃப் - ன் பிறந்த நாள் வாழ்த்து

rajinikanth yuvrajsingh
By Irumporai Dec 12, 2021 09:28 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் 2011 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதன்பின்னர் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். யுவராஜ்சிங்கினால், பழைய அதிரடி ஆட்டத்தை தொடர முடியவில்லை.

ஆனாலும் அவ்வப்போது சில போட்டிகளில் ஆடி வந்தார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நெருங்கிய நண்பர் முகமது கைஃப் ஒரு வாழ்த்தை தெரிவித்துள்ளார்

அதில்,”ரஜினிகாந்த் சாருக்கும், யுவராஜ் சிங்கும் ஒரே நாள் பிறந்தநாள் என்பது மட்டும் ஒற்றுமையான விஷயமல்ல. அதியசம் மற்றும் அற்புதம் நிகழ்த்துவது, பல கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவது ஆகிய அனைத்துமே இவர்கள் இருவருக்கும் ஒற்றுமையான ஒன்று.

தலைவருக்கும் சல்யூட், என் நண்பனுக்கு அன்பை தருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.