இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..நடக்குமா முதல் ஒருநாள் போட்டி ?

cricket positive indian players indian team ind vs wi test covid
By Swetha Subash Feb 03, 2022 06:19 AM GMT
Report

இந்திய அணியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில்,

இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று விமானம் மூலம் அகமதாபாத்திற்கு வரவழைக்கப்பட்டு பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 3 வீரர்கள் உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முதன்மை தேர்வான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கெயிக்வாட் ஆகியோருக்கு தான் கொரோனா உறுதியாகியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.