4-வது மாடி...தவறி விழுந்து விபரீதம் - இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மரணம்!! ரசிகர்கள் அதிர்ச்சி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன், இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜான்சனுக்கு 52 வயதாகிறது. அவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளார்கள். ஜான்சன் தனது வீட்டிற்கு அருகில் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வந்தார், ஆனால் சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
அவரது திடீர் மரணம் கிரிக்கெட் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது, அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரரை இழந்த பலர் இரங்கல் தெரிவிக்கின்றனர். 1996 ஆம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜான்சன் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
காயம் காரணமாக ஜவகல் ஸ்ரீநாத் விலகிய நிலையில், களமிறக்கப்பட்டார். இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜான்சன்.
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 39 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், 33 லிஸ்ட் ஏ கேம்களில் கர்நாடகாவிற்காக விளையாடி 41 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா, முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அனில் கும்பளே ஆகியோரின் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.