2ம் தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதல் - அதிர்ச்சி அடைந்த நிபுணர்கள் எச்சரிக்கை!
தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றியுள்ளது.
உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு பரவத் தொடங்கியது. அதிலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களை பாடாய் படுத்தி தாக்கி அழித்துக் கொண்டு வருகிறது.
கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதுபோக, கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, பச்சை பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என்று நோய்கள் பரவி மக்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.
இந்தியாவில் இரட்டை உருமாற்ற வகை வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு, ‘டெல்டா’ வகை வைரஸ் என பெயர் வைக்கப்பட்டது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் 2வது அலை பெரும் பாதிப்பு மற்றும் உயிர் பலியை ஏற்படுத்தியது. தற்போது, இந்தியாவில் 2வது அலை பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
ஆனால், இன்னும் சில மாதங்களில் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ‘டெல்டா பிளஸ்’எனும் புதிய உருமாற்ற வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஏ.ஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இப்போது இருக்கும் வைரஸ் உருமாற்றம் அடைந்த வைரஸ்களில் வித்தியாசமானதாக உள்ளது. இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்க உதவக் கூடியது. எனவே, தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றியுள்ளது. இங்கிலாந்தில் 36 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2 பேர், 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.