இன்று இந்தியாவிற்கு வருகிறார் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்
ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று டெல்லி வருகை தர இருக்கிறார்.
இந்திய-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வர இருக்கிறார்.
அப்போது, 7 லட்சத்துக்கும் மேற்பட்ட நிமிடத்திற்கு 600 தோட்டக்களை உமிழும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் மாநாட்டில் ரஷ்ய பிரதமர் கலந்து கொண்டு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.