இன்று அம்பேத்கர் நினைவு நாள் - குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.