முதல்முறையாக பகலிரவு போட்டியில் விளையாடும் இந்திய பெண்கள் அணி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது.
இப்போட்டி 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆசியுடன் இந்திய பெண்கள் அணி மோதுகிறது.
இதில் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இது இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.