இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி - இந்திய அணி பேட்டிங் தேர்வு
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த போட்டியின் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் 26-12-21 ஆன இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா அணியிலிருந்து விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் மற்றும்,
தென்ஆப்பிரிக்கா அணியிலிருந்து டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி, ஜன்சின் களமிறங்க உள்ளனர்.