சந்திரயான் 3 ரோவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது - இஸ்ரோ நெகிழ்ச்சி!

India Indian Space Research Organisation
By Jiyath Aug 24, 2023 05:21 AM GMT
Report

சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சந்திரயான் 3 ரோவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது - இஸ்ரோ நெகிழ்ச்சி! | India Took A Walk On The Moon Says Isro I

இதைத் தொடர்ந்து நேற்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது.

இஸ்ரோ

அதனை தொடர்ந்து தரையிறங்கிய போது கிளம்பிய புழுதி அடங்கிய பிறகு பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே கொண்டு வரும் பணிகளை தொடங்கியது இஸ்ரோ. கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கிய ரோவர் சுமார் 6 மணி நேரம் கழித்து முழுமையாக வெளியில் வந்து நிலவில் தடம் பதித்தது.

இதனை இஸ்ரோ இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'சந்திரயான் 3 ரோவர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. நிலவுக்காக தயாரிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது என்றும் இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது! என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் பல அப்டேட்டுகள் விரைவில் என்றும் இஸ்ரோ இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.