அவசரப்பட்டு இந்த முடிவ மட்டும் எடுத்திடாதீங்க - இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கு நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (செப் 10) துவங்க உள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இரு அணி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத முகமது ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதால், கடைசி போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தால் முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்படுவார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் வேறு சில தகவல்களோ ஜஸ்ப்ரிட் முகமது ஷமி சேர்க்கப்பட்டு பும்ராஹ்விற்கு ஓய்வு (பணிச்சுமையை குறைக்க) வழங்கப்படும் என தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், கடைசி போட்டிக்கான இந்திய அணியில் பும்ராஹ் நிச்சயம் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இன்னும் வெல்லவில்லை. டெஸ்ட் தொடரை வெல்வது தான் இலக்கு என்றால் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் நிச்சயம் விளையாட வேண்டும். பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு - இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல் IBC Tamil
