20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி: கோலி, பாண்ட்யா அரைசதம் : வெற்றி பெறுமா இங்கிலாந்து

T20 World Cup 2022
By Irumporai Nov 10, 2022 10:25 AM GMT
Report

டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

கொஞ்சம் தடுமாற்றம்

முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவுர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார்.

விராட் பாண்டயா அதிரடி

அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ரன்களை இந்திய அணி  எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.