இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றது..
இந்தியா அனுப்பி வைத்த 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று இலங்கையை சென்றடைந்தது.
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டுக்கு உதவிடும் வகையில் எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும்,கடந்த மாதம் அதே தொகையும் இந்தியா கடனாக வழங்கியது.
ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல்,டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ந் தேதி 40 ஆயிரம் டீசல் இந்தியா வழங்கியது.
இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. அந்த கப்பல், நேற்று கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.