பிபின் ராவத் வீட்டுக்கு விரைந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

india-samugam-rajnathsign--pipin-rawat-house
By Nandhini Dec 08, 2021 10:53 AM GMT
Report

பிபின் ராவத் வீட்டிற்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை என்ன என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவசர, அவசரமாக கூடியது.

இந்த விபத்து குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இதற்கிடையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் வீட்டுக்கு சென்று ராவத் மகளை சந்தித்துள்ளார்.

அவர் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.