பிபின் ராவத் மரணம் - ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு - மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங்

india-samugam pipin-rawat-rajnath-singh
By Nandhini Dec 08, 2021 01:10 PM GMT
Report

பிபின் ராவத் மரணம் நமது இந்திய ராணுவத்துக்கும், நம் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிபின் ராவத் மரணம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்,

அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.’ என்று பதிவிட்டுள்ளார்.