அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் – ராகுல்காந்தி டுவிட்

india-rahul-gandhi
By Nandhini Nov 19, 2021 05:07 AM GMT
Report

சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர்- 25ம் தேதியிலிருந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவீட்டர் பக்கத்தில், ‘சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.