உயிர் போகும் தருவாயில் பிபின் ராவத் பேசிய அந்த வார்த்தைகள் - நெஞ்சை பதற வைக்கும் திக்.. திக்.. நிமிடங்கள்...

india- pipin-rawat last-minutes
By Nandhini Dec 16, 2021 06:33 AM GMT
Report

உயிர் போகும் தருவாயில் இந்திய ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறிய அந்த கடைசி வார்த்தைகள் வெளியாகி மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 8ம் தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் வெடி சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இந்தியாவை மட்டுமல்ல, உலக நாடுகளையே உலுக்கி எடுத்தது.

ஹெலிகாப்டரில் சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தப்பிய கேப்டன் வருண் சிங்கும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிர் போகும் கடைசி சில நிமிடத்தில் பிபின் ராவத் என்ன சொன்னார் என்பது பற்றி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் இருப்பவர்கள் யார் என்ற விவரங்கள் எதையும் அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை.

விபத்தில் சிக்கிய அனைவரையும் கிராம மக்கள் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பிபின் ராவத்தையும் ஆம்புலன்சில் கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது ஆம்புலன்சில் இருந்தவர்கள் பிபின் ராவத்தின் கடைசி நேர சம்பவங்களை பற்றியும், அப்போது நடந்தவற்றையும் தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவ நடந்த இடத்தில் ஆம்புலன்சை இயக்கிய ஓட்டுநர் ராமமூர்த்தி கூறியதாவது -

நண்பகல் 12.36 மணிக்கு விபத்து நடந்ததாக உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. சரியாக 12.40 மணிக்கு எல்லாம் சம்பவ பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு ஆம்புலன்சில் சென்றவர்கள், பிபின் ராவத்தை எங்கள் வாகனத்துக்கு கொண்டு வந்தார்கள். வண்டியில் இருப்பது பிபின் ராவத் என்பது எங்களுக்கு தெரியாது. மிக அவசரம் என்று சூழலில் பார்க்கும் போது புரிந்ததால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தேன் என்றார்.

மருத்துவ உதவியாளர் விக்னேஷ் கூறியதாவது -

விபத்து நடந்த ஹெலிகாப்டரில் இருப்பது பிபின் ராவத் என்று எங்களுக்கு தெரியாது.

தெரியாமலே அவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்தோம். அடுத்த அதே ஆம்புலன்சில் வருண்சிங்கையும் ஏற்றினார்கள்.

2 பேரையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு பறந்தோம். அவர்களை உயிரோடு கொண்டு போய் சேர்த்துவிட்டோம்.

அப்போது பிபின் ராவத் சில வார்த்தைகள் பேசினார்.

அவர் பேசிய இந்தி வார்த்தைகள். ஆகையால் அது என்னவென்று எனக்கு சரியாக புரியவில்லை.

பக்கத்தில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் அவர் ஏதோ பேசினார். எப்படியாவது தம்மையும், எல்லோரையும் காப்பாற்றுமாறு அவர் கூறியது மட்டும் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. 

இவ்வாறு அவர் பேசினார்.