ஆசிய கோப்பை தொடர் 2023...- இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதும்.. - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
2023ம் ஆண்டுஆசிய கோப்பை தொடரில், இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோத இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
டி20 துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி இலங்கை அணி அசத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல் -
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற உள்ளது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது. 6 அணிகள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளது. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோத இருக்கிறது என்று பதிவிட்டு அட்டவணையை ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார்.
2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் முதலில் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என்று ஜெய் ஷா கூறிய கருத்துக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Presenting the @ACCMedia1 pathway structure & cricket calendars for 2023 & 2024! This signals our unparalleled efforts & passion to take this game to new heights. With cricketers across countries gearing up for spectacular performances, it promises to be a good time for cricket! pic.twitter.com/atzBO4XjIn
— Jay Shah (@JayShah) January 5, 2023