இன்று எண்ணெய், எரிவாயு துறை அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
india-modi-meeting
By Nandhini
சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக இன்று கலந்துரையாட இருக்கிறார்.
இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உள்ளிட்ட இத்துறையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து அவர்கள் கலந்துரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முதலீட்டிற்கு சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.