'அவரது ஆசை நிறைவேறாமலே போய் விட்டதே...' - பிபின் ராவத் உறவினர் கண்ணீர்

india-helicopter-crash- relative-of-pipin-rawat
By Nandhini Dec 09, 2021 09:50 AM GMT
Report

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சொந்த ஊர் உத்தரகண்ட் மாநிலம், துவாரிக்கல் வட்டாரம், சாய்னா கிராமமாகும். தற்போது, இந்த கிராமத்தில் பிபின் ராவத்தின் உறவினர்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து பிபின் ராவத்தின் உறவினர் பரத் சிங் ராவத் பேசுகையில், கடந்த 2018ம் ஆண்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்தார் பிபின் ராவத். அப்போது, கிராமத்தில் உள்ள தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். கிராமத்தில் தனக்கென ஒரு வீடு கட்டப் போகிறேன். பணி ஓய்வுக்குப் பிறகு இங்கு வந்துவிடுவேன். வரும் ஏப்ரல் மாதம் வர இருப்பதாக சமீபத்தில் தொலைபேசியில் கூறினார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று கண்ணீருடன் தழுதழுத்த குரல் பேசினார்.

இந்நிலையில், அண்டை கிராமங்களில் உள்ளவர்கள், பிபின் ராவத் வீட்டுக்கு வந்து, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.