ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள்
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 முக்கிய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒரு வீரர் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் -
ஹவில்தார் சத்பால்
பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர்
சாய் தேஜா
ஜிதேந்திர குமார்
விவேக் குமார்
குருசேவக் சிங்
லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.
- அவரது மனைவி மதுலிகா ராவத்.
- பிபின் ராவத்தின் ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர்.
- லெஃப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
- விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுஹான்
- ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங்
- ஜூனியர் வாரன்ட் ஆஃபீஸர் ரானா பிரதாப் தாஸ்
- ஜூனியர் வாரன்ட் ஆஃபீஸர் அரக்கல் பிரதீப்
- ஹலிதார் சத்பால் ராய்
- நாயக் குருசேவக் சிங்
- நாயக் ஜிதேந்திர குமார்
- லேன்ஸ் நாயக் விவேக் குமார்
- லேன்ஸ் நாயக் சாய் தேஜா