அப்புறம் ஆரம்பிக்கலாங்களா : சுவிஸ் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல்
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் கோட்டையாக உள்ளது.இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்திய அரசு சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் உள்ள கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல், கடந்த 2019 செப்டம்பரில் வழங்கப்பட்டது
2020- அக்டோபரில் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.தற்போது மூன்றாவது பட்டியல் இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையாக சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்த தகவலும் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.