இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
india
cricket team
coach
covid affect
By Anupriyamkumaresan
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மூன்று பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் பட்டேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் 171 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கி உள்ளது.