இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - தமிழ்நாட்டின் நிலை என்ன?

COVID-19 Tamil nadu India
By Sumathi Jun 06, 2025 10:28 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.

corona

இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் நிலவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம்? ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம்? ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

தமிழ்நாடு நிலை?

அதேசமயம் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. தேசிய அளவில் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - தமிழ்நாட்டின் நிலை என்ன? | India Covid Cases Rise To 5364 Tamilnadu Update

அதிகபட்சமாக, கேரளாவில் ஆயிரத்து 679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாபில் தலா ஒருவர் என 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.