இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 6,563 பேருக்கு கொரோனா தொற்று - வெளியான தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 132 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,46,838 ஆக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவுதான். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,46,838 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 132 ஆக பதிவாகி இருக்கிறது.
இதுவரை இந்தியாவில் 4,77,554 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொற்றிலிருந்து ஒரே நாளில் 8,077 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,87,017 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 82,267 ஆக குறைந்திருக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை 1,37,67,20,359 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15,82,079 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.