இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் - பறிபோகும் பொன்னான வாய்ப்பு
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதாக இரு அணிகள் மீது ஐசிசி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதோடு, இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை நீக்கியுள்ளது.
இதனால் வருங்காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் சிக்கல் ஏற்படுமா என்ற கவலை இருநாட்டு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது.