75வது சுதந்திர தின விழா; இந்திய-சீன எல்லையில் இந்திய தேசிய கொடியை ஏற்றி ராணுவ வீரர்கள் மரியாதை

Independence Day
By Nandhini Aug 15, 2022 07:46 AM GMT
Report

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய - சீன எல்லையில் இந்தோ திபெத்திய ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். 

75-வது சுதந்திர தினம்

இன்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். மேலும், உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எல்லையில் தேசிய கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள்

இந்நிலையில், இந்திய - சீன எல்லையில் இந்தோ திபெத்திய ராணுவ வீரர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கையில் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி கம்பீரமாக முழக்கமிட்டனர்.   

75th-independence-day