இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 லட்சம் பேர் பலி : மத்திய சுகாதாரத் துறை தகவல்!

india
By Nandhini May 12, 2021 07:05 PM GMT
Report

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 823 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும், இதுவரை 17 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 லட்சம் பேர் பலி : மத்திய சுகாதாரத் துறை தகவல்! | India