கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது - நித்தியானந்தா திடீர் அறிவிப்பு

india
By Nandhini Apr 21, 2021 07:55 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருவதால், இந்தியாவிலிருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என நித்யானந்தா அறிவித்திருக்கிறார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா, இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். அவர் எங்கே என்று பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த போது, தனித்தீவு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியதாகவும், கைலாசாவை தனி நாடாகவும் திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதன் பிறகு, அவர் அவ்வப்போது ஏதாவது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது - நித்தியானந்தா திடீர் அறிவிப்பு | India

அந்த அறிவிப்பில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்து வருவதால் இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி கிடையாது. ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளிலிலிருந்து பக்தர்கள் கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.