இலங்கை அணியை ஓட விட்ட ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா - டி20 தொடரை வென்று அசத்தல்
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது.
That's that from the 2nd T20I.
— BCCI (@BCCI) February 26, 2022
74* from @ShreyasIyer15, 39 from @IamSanjuSamson
and a brilliant 18-ball 45* from @imjadeja as #TeamIndia seal the T20I series.
Scorecard - https://t.co/ImBxdhXjSc #INDvSL @Paytm pic.twitter.com/ELvnJ3RrgN
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிசாங்கா 75, கேப்டன் தசுன் சணகா 47 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (74), சஞ்சு சாம்சன்(39), ஜடேஜா(45) ரன்கள் விளாச 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. குறிப்பாக கடைசிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்து எதிரணியினரை மிரள வைத்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.