ரொம்ப மோசம்… இப்படி ஆகுமுன்னு நாங்க நினைக்கல : சோகத்தில் தென் ஆப்ரிக்கா கேப்டன் !

Indian Cricket Team South Africa National Cricket Team
By Irumporai Sep 29, 2022 10:19 AM GMT
Report

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்திய அணி வெற்றி

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, ஆடுகளத்தின் தன்மை இந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரொம்ப மோசம்… இப்படி ஆகுமுன்னு நாங்க நினைக்கல : சோகத்தில் தென் ஆப்ரிக்கா கேப்டன் ! | Ind Vs South Africa Kipper Temba Bavumaa

தோல்விக்கு இதுதான் காரணம்

மேலும்,பேட்டிங்கில் நாங்கள் எங்களது வேலையை சரியாக செய்ய தவறிவிட்டோம். ஆடுகளத்தின் தன்மை மிக கடினமாக இருந்தது, ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாவும், சற்று கடினமாகவும் இருக்கும் என நினைத்தோம், ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஓரளவிற்காவது போதுமான ரன்கள் எடுத்தால் மட்டுமே பந்துவீச்சாளர்களாலும் அதனை கட்டுப்படுத்த முடியும், எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை மிக சிறப்பாக செயல்பட்டனர்.

ரொம்ப மோசம்… இப்படி ஆகுமுன்னு நாங்க நினைக்கல : சோகத்தில் தென் ஆப்ரிக்கா கேப்டன் ! | Ind Vs South Africa Kipper Temba Bavumaa

கடைசி நேரத்தில் பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டோம், அது மட்டுமே இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமான விசயம்” என்று தெரிவித்தார்.