ஆபத்து வரலாம் உளவுப்பிரிவு எச்சரிக்கை : பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

M K Stalin DMK
By Irumporai Nov 11, 2022 03:22 AM GMT
Report

திண்டுக்கலில் இன்று நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

திண்டுக்கல் வரும் பிரதமர் 

அவருடன் முதலமைச்சர் மு,க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அவ்ர்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவின் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக உயர் காவல் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் : 

ஆபத்து வரலாம் உளவுப்பிரிவு எச்சரிக்கை : பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு | Increased Security For Pm Modi Mkstalin

பாதுகாப்பு அதிகரிப்பு 

பிரதமர், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      தலைவர்கள் தங்குமிடம், செல்லும் வழிகள், பங்கு பெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாசவேலைக்கு எதிரான சோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.