பயமுறுத்தும் பருப்பு விலை; இதுக்கு இல்லையா ஒரு எண்டு - புலம்பும் பொதுமக்கள்!

India
By Sumathi Jul 15, 2023 04:59 AM GMT
Report

பருப்பு வகைகளின் பணவீக்கமானது 10.58 சதவீதம் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்

அதிகபட்ச மழையின் காரணத்தினால் உணவு தானியங்கள், காய்கறிகள் போன்ற பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்திற்கான செலவும் உயர்ந்துள்ளது.

பயமுறுத்தும் பருப்பு விலை; இதுக்கு இல்லையா ஒரு எண்டு - புலம்பும் பொதுமக்கள்! | Increase In The Price Of Pulses In India

இதனால் ஒட்டுமொத்தமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காய்கறிகளில் வெங்காயம், தக்காளி, வெள்ளை பூண்டு, இஞ்சி, பீன்ஸ் போன்றவற்றின் விலை இதுவரை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

பருப்பு விலை

அந்த வகையில் தற்போது பருப்பு வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி சிபிஐ பருப்பு வகைகளின் பணவீக்கமானது 10.58 சதவீதம் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பயமுறுத்தும் பருப்பு விலை; இதுக்கு இல்லையா ஒரு எண்டு - புலம்பும் பொதுமக்கள்! | Increase In The Price Of Pulses In India

நாட்டின் மற்ற மாநிலங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்ட போதிலும் இந்தியா மியான்மர், கனடா போன்ற மற்ற நாடுகளில் இருந்து அதிக அளவு பருப்புகளை இறக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.