மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று - முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

COVID-19 Government Of India
By Thahir Apr 02, 2023 06:21 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய சுகாதாரத்துறை சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அதிகரித்த கொரோனா தொற்று 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,823 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 2,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Increase in Corona cases in India

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

முக்கிய எச்சரிக்கை 

கொரோனா தொற்று இருப்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களும் கோவிட் பாதிப்புக்கு இணை பாதிப்புகள் குறித்து கவனமாக செயல்படும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மிதமான நோய்க்கூறு இருப்பவர்களுக்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி கொள்ளப்பட்டுள்ளது.