“எப்படியாவது ஜெயிச்சிடுங்கய்யா ப்ளீஸ்” - அதீத நம்பிக்கையில் பாகிஸ்தான் பிரதமர்
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி நிச்சயம் வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது. இதில் இன்று நடக்கும் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இதனிடையே முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்.? இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் இறைவன் அருளால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.