மனைவியின் தகாத உறவு.. தந்தை எடுத்த விபரீத முடிவு - பரிதவிக்கும் 3 குழந்தைகள்!

Tamil nadu Madurai Crime
By Vidhya Senthil Sep 11, 2024 04:46 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

தந்தையும் தீக்குளித்து உயிரிழந்ததால் 3 குழந்தைகளும் பரிதவித்து  வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மனைவியின் தகாத உறவு

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த பொன்வேந்தன் (35) சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்தார். இவருடைய மனைவி முத்துபிரியா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

crime

இதனையடுத்து முத்துபிரியா பாலமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கும், வேறு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தகாத உறவு; மருமகனுக்கு மனைவியை கட்டிவைத்த மாமனார் - பகீர் பின்னணி!

தகாத உறவு; மருமகனுக்கு மனைவியை கட்டிவைத்த மாமனார் - பகீர் பின்னணி!

இதை அறிந்த பொன்வேந்தன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முத்துபிரியா குழந்தைகளையும், காதல் கணவரையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.

 விபரீத முடிவு

இதனால் மனமுடைந்த பொன்வேந்தன் பலமேடு காவல் நிலையம் அருகில் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தார். இதுகுறித்து பாலமேடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொன்வேந்தனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

death

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்வேந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலமேடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு தாய் சென்ற நிலையில், தந்தையும் தீக்குளித்து உயிரிழந்ததால் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள்.