வெளிநாடு போட்டிகளில் விளையாட தடை !! அதிருப்தியில் ஓய்வு அறிவித்த பாக். வீரர்..!!

Cricket Pakistan Pakistan national cricket team
By Karthick Nov 28, 2023 06:51 AM GMT
Report

புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து பாக். அணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  

பாக். அணியின் கட்டுப்பாடு

நடைபெற்று முடிந்த உலககோப்பை தொடரில் பாக். அணி லீக் சுற்று போட்டிகளுடன் வெளியேறியது. இது அந்த அணிக்கு நிர்வாகம், வீரர்கள், ரசிகர்கள் என அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

imam-wasim-announced-retirement-problem-with-team

இந்நிலையில், பாக் கிரிக்கெட் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அணி வீரர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, அணி வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்க காலம் தாழ்த்தி வருகின்றது.

ஓய்வை அறிவித்த வீரர்

புதிய தேர்வு குழு தலைவராகியுள்ள வாகப் ரியாஸ், இது குறித்து தெரிவிக்கும் போது, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கே பெரும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

imam-wasim-announced-retirement-problem-with-team

இது குறித்து அணி நிர்வாகத்திற்கும், அணி வீரர்களுக்கும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், அந்த அணியின் முன்னணி வீரரான இமாம் வாசிம் தனது ஒய்வு முடிவை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபின் டி10 போட்டி போன்றவற்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் ஒய்வு முடிவை அறிவித்துள்ளதாக வாகப் ரியாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.