சிலரை எதிர்க்க நான் தயார்- பாஜகவும் தயாராகும் என நம்புகிறேன் ...அண்ணாமலை திட்டவட்டம்
தமிழக அரசியல் களத்தில் தற்போது அண்ணாமலை குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், யாத்திரையின் போது அவர் கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
மாற்றப்படுவாரா அண்ணாமலை?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக அதிருப்தி தெரிவித்து அவரை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்துள்ளது. டெல்லி பாஜக தேசிய தலைமைக்கு இந்த அழுத்தத்தை அதிமுகவின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது அண்ணாமலை மாற்றப்படுவாரா? என்ற செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை தீவிரமாக மேற்கொண்டு வரும் அண்ணாமலை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மட்டுமே மையப்படுத்தி தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றார். கூட்டணி குறித்து பேசிய அவர், அதனை தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
எதிர்க்க நான் தயார்
இந்நிலையில், பொள்ளாச்சியில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, கூறிய கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் தனித்து விடப்படுமா? என்ற கேள்விகள் எழும் சூழலில் அது குறித்து அவர் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பேசிய அவர், அரசியல் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்பதால், சிலரை எதிர்த்து நிற்கும் காலம் இது என குறிப்பிட்டு, அவ்வாறு இல்லையென்றால் தான் மாநில தலைவர் என்ற நம்பிகையை மக்களிடம் இழந்துவிட தயாராக இல்லை என தெரிவித்தார். தான் சிலரை எதிர்க்க நிக்க தான் தயாராகிவிட்டதாக கூறி, அதே போன்ற நிலைப்பாட்டையே பாஜகவும் எடுக்கும் என தான் எதிர்பார்பதாக கூறினார்.