அரவிந்த் சாமி அப்பா நான் தான்..பிறந்ததுமே தத்து கொடுத்துட்டோம்....சீரியல் நடிகர் பேட்டி
நடிகர் அரவிந்த் சாமி தந்தை நான் தான் என பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நடிகர் அரவிந்த் சாமி
90-களின் துவக்கத்தில் மணி ரத்னம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. தளபதி படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து ரோஜா, பாம்பே, மின்சார கனவு, என் சுவாச காற்றே என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார்.
இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்க திடீரென சினிமாவை விட்டு விலகினார். நீண்ட காலமாக திரையில் தோன்றாமல் இருந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, தற்போது திரையுலகில் மீண்டும் பிஸியாக நடித்து வருகின்றார்.
அப்பா நான் தான்
அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லை என்றும் தானே என சீரியல் நடிகர் டெல்லி குமார் தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரை தொலைக்காட்சிகள் பிரபலமாக நடிகராக இருக்கும் டெல்லி குமார் ஆனந்தம், மெட்டி ஒலி போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் தான் என்றும், பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் அரவிந்த்சாமி வந்து கலந்து கொள்வார் என கூறியிருக்கிறார்.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

Optical illusion: கண்களை ஏமாற்றும் இந்த படத்தில் இருக்கும் '6' இலக்கங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
