இளையராஜாவுக்கு போன் செய்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

Illaiyaraja Modi-Says-Thanks
By Nandhini Apr 20, 2022 11:13 AM GMT
Report

சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இளையராஜாவின் இந்தக் கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனால், சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.

இந்நிலையில், தன்னைப் பற்றி நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.