ஆண்டி என்று கூப்பிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் - பிரபல நடிகை எச்சரிக்கை
தன்னை ஆண்டி என்று யாராவது கூப்பிட்டால் அவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பேன் என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக அறிமுகமானவர் அனுசுயா. இதையடுத்து நடிகையாகவும் வலம் வருகிறார்.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வில்லியாக நடத்திருந்தார். இதன் இரண்டாவது பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் நடிகை அனுசுயாவும் தன் பங்கிற்கு விமர்சித்தார்.
போலீசில் புகார் கொடுப்பேன்
இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் நடிகை அனுசுயாவை ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
தன்னை ஆண்டி என்று விமர்சிப்பவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆண்டி என்று அழைக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.