தேர்தல் நேரத்தில் இதெல்லாம் என் மீது வீண் பழி.....குற்றம்சாட்டிய சீமான்

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthick Sep 01, 2023 06:13 AM GMT
Report

இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் நேரத்தில் தன் பணிகளை முடக்கும் வகையில் தான், இந்த வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது என கூறினார்.

விஜயலக்ஷ்மி புகார் - சீமான் விளக்கம்

செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை விஜயலக்ஷ்மியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது தேவையற்ற கேள்வி என கூறிய சீமான், இதே மாதிரியான குற்றசாட்டு பல பேர் மீதுள்ளது என சுட்டிக்காட்டி, தேவையில்லாத விஷயத்தை ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

if-im-found-guilty-take-action-seeman

தேர்தல் நேரத்தில் தன் பணிகளை முடக்கவே இந்த போன்ற வீண் பழிகள் தன் மீது சுமத்தப்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், விசாரணை முடிந்து தன் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த ஆட்சியில் தவறிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.

தன்மானத்தை இழந்துவிட்டோம்

 தொடர்ந்து ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நாட்டில் பல வேறுபாடுகளும், பல விதமான பழக்க வழக்கங்களும் இருக்கும் நிலையில், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல என குற்றம்சாட்டி பேசினார்.

if-im-found-guilty-take-action-seeman

மேலும், காவிரி நதிநீர் குறித்து பேசிய அவர், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி கொடுத்தால், ஒரே நாடு திட்டம் குறித்து விவாதிக்கலாம் என குறிப்பிட்ட சீமான், பாஜகவும், காங்கிரஸும் கர்நாடக மாநிலம் என்றால் மாநில கட்சியாக மாறி அந்த மாநிலத்தின் நலனை மற்றுமே பார்ப்பதாக குறிப்பிட்டு, ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் தன்மானத்தை இழந்து விட்டது என கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். 

அண்ணாமலை மீது விமர்சனம்

மேலும், அண்ணாமலைக்கு பதிலளித்து பேசிய சீமான், ஏற்கனவே நாட்டை கொடுத்த நிலையில் அதனை பிச்சைக்கார நாடக மாற்றிய நிலையில், எங்கள் மண்ணையாவது விட்டுவிடுங்கள் என கூறி, தன்னை வாரணாசியில் போட்டியிட சொல்லும் அண்ணாமலை, அவர் வேலை பார்த்த கர்நாடகாவில் கட்சியில் இருக்கலாமே என கூறினார்.

if-im-found-guilty-take-action-seeman

அதே, நேரத்தில் கர்நாடகத்தில் சிங்கமாக இருந்த அண்ணாமலை தற்போது தமிழகத்தில் அசிங்கமாக இருக்கிறார் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.