டி20 உலகக்கோப்பை : ரசிகர்களுக்கு அனுமதி? - வெளியான முக்கிய தகவல்!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என யுஏஇ அரசிடம் பிசிசிஐ கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் போட்டியை நடத்த ஐசிசி தயக்கம் காட்டியது.
இதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது .இதற்கான அட்டவணையும் சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண 25,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிசிசிஐ மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் ஆகியவை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
இதற்கு யுஏஇ அரசு அனுமதி அளித்தால் டி20 உலகக் கோப்பை போட்டியை காண 25,000 ரசிகர்கள் நேரில் காணலாம்.