இனி எல்லைக்கோட்டில் சாசகமெல்லாம் முடியாது - ஐசிசி அதிரடி மாற்றம்

Cricket International Cricket Council
By Sumathi Jun 14, 2025 07:48 AM GMT
Report

பவுண்டரி லைன் கேட்ச் விதி மாற்றப்பட்டுள்ளது.

பவுண்டரி ரூல்

கிரிக்கெட்டில் சிக்ஸர்களை தடுப்பதற்கு பல முயற்சிகளை பவுண்டரி லைனில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் Bunny hop என்ற முறையில்,

இனி எல்லைக்கோட்டில் சாசகமெல்லாம் முடியாது - ஐசிசி அதிரடி மாற்றம் | Icc Changed The Rules For Boundary Line Catch

பந்தை பிடிக்க முயலும் போது அது சிக்ஸர் லைனை நாம் தாண்டி சென்று விடுவோம் என வீரர்கள் நினைத்து பந்தை களத்திற்குள் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது மீண்டும் களத்திற்குள் வந்து கேட்சை பிடிப்பார்கள். இதில் சில தவறுகள் நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாதிரி கேட்சை பிடிக்கும் வீரர்கள் ஒரே கேட்சை பிடிப்பதற்காக பலமுறை பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று விட்டு பந்தை களத்திற்குள் தூக்கி எறிந்து மீண்டும் கேட்ச் பிடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய விதியின் மூலம் இந்த வகையான கேட்ச் தடை விதிக்கப்படுகிறது.

கோலி அப்படி செய்திருக்க கூடாது; கேப்டனாக்கி இருப்பேன் - ரவி சாஸ்திரி வேதனை

கோலி அப்படி செய்திருக்க கூடாது; கேப்டனாக்கி இருப்பேன் - ரவி சாஸ்திரி வேதனை

புதிய விதி

அதன்படி கேட்சை பிடிக்கும் வீரர் எல்லைக்கோட்டை ஒருமுறை மட்டுமே தாண்டி பந்தை தூக்கி எறிய முடியும். இது வரும் 17ஆம் தேதி மூலம் அமலுக்கு வருகிறது. ஒரே கேட்சில் இரண்டாவது முறையும் இதே செய்தால் அது சிக்ஸராக அறிவிக்கப்படும். அதாவது ஒருமுறை மட்டுமே பவுண்டரி லைனைத் தாண்டி அந்தரத்தில் பந்தை பிடித்து மைதானத்திற்கு உள்ளே தூக்கிப் போட வேண்டும்.

இனி எல்லைக்கோட்டில் சாசகமெல்லாம் முடியாது - ஐசிசி அதிரடி மாற்றம் | Icc Changed The Rules For Boundary Line Catch

அதே கேட்சில், இரண்டாவது முறையாக மைதானத்திற்கு வெளியே சென்று விட்டால் அது சிக்ஸராக கருதப்படும். இதே போன்று முதல் வீரர் தூக்கி போடும் பந்தை, 2வது வீரர் களத்திற்குள் பிடிக்கும் போது, பந்தை எறிந்த முதல் வீரர் மைதானத்திற்குள் வந்துவிட வேண்டும்.