கதிர் ஆனந்த் மீண்டும் வெற்றி பெறுகிறாரா?? ஐபிசியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவு

DMK Durai Murugan Lok Sabha Election 2024
By Karthick Apr 17, 2024 07:57 AM GMT
Report

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது ஐபிசி தமிழ். 

கதிர் ஆனந்த் 

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார் திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.

ibc-tamil-opinion-poll-in-vellore-kathir-ananth

தற்போது அவருக்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுகவில் கதிர் ஆனந்த், அதிமுகவில் பசுபதி, பாஜகவில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சியில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ibc-tamil-opinion-poll-in-vellore-kathir-ananth

மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த், தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு அவருக்கு உறுதுணையாக அவரது மனைவியும் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஐபிசி  கருத்துக்கணிப்பு

பிரச்சாரத்தில், பத்தலப்பள்ளி பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என கதிர் ஆனந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ibc-tamil-opinion-poll-in-vellore-kathir-ananth

இந்நிலையில், ஐபிசி தமிழ் நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பின் படி, வேலூர் மக்களவை தொகுதியில் கதிர் ஆனந்த் மீண்டும் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.