என்னைய ஹோட்டலுக்கு கூப்பிட்டார்.. இன்னொருத்தர் எனக்கு தாலி கட்டினார் : சுவப்னா சுரேஷ் சுயசரிதையால் பரபரப்பு

Kerala Crime
By Irumporai Oct 11, 2022 04:06 AM GMT
Report

சதியின் பத்ம வியூகம் என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் தனக்கு தாலி கட்டினார் என எழுதியுள்ளது,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க கட்டி கடத்தல்

கடந்த 2020 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்ட விவாகரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்னைய ஹோட்டலுக்கு கூப்பிட்டார்.. இன்னொருத்தர் எனக்கு தாலி கட்டினார் : சுவப்னா சுரேஷ் சுயசரிதையால் பரபரப்பு | Ias Officer Sivasankaran Marriage Swapna Suresh

அதுவும் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

சிக்கிய ஸ்வப்னா

நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தின.

இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது.

இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சுயசரிதையால் சர்ச்சை

இருந்த நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுய சரிதை புத்தகம் பெரும் பரபரப்பையும் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார்

என்னைய ஹோட்டலுக்கு கூப்பிட்டார்.. இன்னொருத்தர் எனக்கு தாலி கட்டினார் : சுவப்னா சுரேஷ் சுயசரிதையால் பரபரப்பு | Ias Officer Sivasankaran Marriage Swapna Suresh

அதில்,  கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.

மீண்டும் பரபரப்பு

குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனினின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். கோவிலில் வைத்து தாலி கட்டிய சிவசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டதாகவும் தன்னை ஒருநாளும் பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ததாகவும் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

தற்போது ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.