பாத்ரூமில் ஐஏஎஸ் அதிகாரி மகள் கிடந்த கொடுமை - 10 மாதத்தில் கசந்த காதல்
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை செய்துள்ளார்.
வரதட்சணை கொடுமை
ஆந்திரா, ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள், மாதூரி சாஹிதிபாய், தனது பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.

மங்களகிரி டி.எஸ்.பி. முரளி கிருஷ்ணா அளித்த தகவலின்படி, வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் அளித்திருந்த நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சாஹிதிபாய் கடந்த மார்ச் 5ஆம் தேதி நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆன சில மாதங்களில், அவர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவதாக பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து,
மகள் தற்கொலை
அவர்கள் சாஹிதிபாயை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அன்றிலிருந்து அவர் அங்கேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வரதட்சணை கொடுமையால் தான் மகள் வாழ்க்கைய முடித்துக் கொண்டதாக மருமகன் ராஜேஷ் நாயுடு மீது பெண்ணின் தந்தை சின்ன ராமுடு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.