நான் சங்கிதான்.. அதில் எனக்கு மிகவும் பெருமை - வெளிப்படையாக சொன்ன அமைச்சர்!
தான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று எல் முருகன் கூறி உள்ளார்.
சங்கிதான்..
அருந்ததியர் ஒதுக்கீடு விவகாரத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக எல் முருகனின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி கொடுக்கும் வகையில் எல்.முருகன் அருந்ததியர் என்பது ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் சமூகத்திற்கே தெரியும். அவா் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். என்று சாடினார்.
அமைச்சர்
இந்த நிலையில், திருமாவளவன் கூறியதற்கு, தற்போது எல் முருகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆர்எஸ்எஸ் காரன், சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன்.
அருந்ததியர் ஒதுக்கீடுக்கு நானும் போராடி உள்ளேன். சனாதனத்தையும், ஆன்மீகத்தையும் ஆதரிப்போம் என கூறி உள்ளார்.